இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் தற்போது மாணவர்களைப் போருக்குச் செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.
பல்கலைக்கழகம் முழுவதும், ஆளில்லா விமானப் படைகளைப் பற்றிய சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு மாணவர்களின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று விளக்கியுள்ளது.
எனினும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சி, குறித்த ஊடகம் எவரையும் அல்லது அவர்களின் பல்கலைக்கழகங்களையும் பெயரிடவில்லை என குறித்த ஊடகம் அடிகோடிட்டுள்ளது.
ஆளில்லா விமானப் படை
குறித்த தகவல்களும், பெருகிவரும் பொது ஆதாரங்களும், மாணவர்களைத் தனது ஆளில்லா விமானப் படையில் சேர ஈர்ப்பதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் ரஷ்யா ஒரு பிரசாரத்தை அமைதியாகத் தீவிரப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நடவடிக்கை ரஷ்யாவின் கல்வி அமைப்பில் பதற்றங்களை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதுடன், உக்ரைனில் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் போருக்கான ஆள்சேர்ப்பைத் தக்கவைப்பதில் மாஸ்கோ எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சவால்களையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரமான ஆள்சேர்ப்பு
மாணவர்களை மையமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, மேலும் தீவிரமான ஆள்சேர்ப்பு உத்திகள் மீண்டும் அதிகரித்து வருவதற்கான பல அறிகுறிகளில் ஒன்றாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது முந்தைய முயற்சிகளிலிருந்து வேறுபட்டது என்னும், மாணவர்களுக்கு ஓராண்டு கால வரையறுக்கப்பட்ட ஒப்பந்தம், போர்க்களத்திலிருந்து வெகு தொலைவில் பணியாற்றும் வாய்ப்பு, மற்றும் உயர் தொழில்நுட்பத் திறன்களைக் கற்கும் சந்தர்ப்பம் ஆகியவை உறுதியளிக்கப்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஆனாலும், இது ஒரு வழக்கமான, காலவரையற்ற இராணுவ ஒப்பந்தத்திற்கான ஒரு மறைப்புத் திட்டமாக இருக்கக்கூடும் என்றும், வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகள் குறித்து பல மாணவர்கள் சந்தேகப்படுவதால், அவர்களை இராணுவத்தில் சேர சம்மதிக்க வைக்க பல்கலைக்கழகங்கள் வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களைக் கையாளுகின்றன என்றும் நிபுணர்களும் வழக்கறிஞர்களும் குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |