அமெரிக்காவின் திடீர் முடிவு: ரஷ்ய - உக்ரைன் போர்நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து!!
ரஷ்ய - உக்ரைன் போர்நிறுத்த பேச்சுவார்த்தை இன்று (23) மொஸ்க்கோவில் நடைபெறவிருந்த நிலையில், இறுதி தருணத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உட்பட பிரித்தானியா, பிரான்ஸ், உக்ரைன் சார்பாகவும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
ரத்துக்கான காரணம்
எனினும், பேச்சுவார்த்தை தொடர்பான திட்டமிடல் பிரச்சினை காரணமாக கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்று கடைசி நிமிடத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் அமைச்சு அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதுடன், லண்டனில் நடக்கவிருக்கும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் பிரித்தானிய உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும், அதற்கு மாறாக அவர்களுக்கு அடுத்தநிலை அதிகாரிகளே கலந்து கொள்வார்கள் என்றும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சசு அறிவித்துள்ளது.
போர்நிறுத்தம்
இவ்வாறானதொரு பின்னணியில், ரஷ்ய - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமைதி தென்படாவிட்டால், பேச்சுவார்த்தையில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியாது என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவின் திடீர் முடிவு, பல்வேறு சந்தேகங்களை சர்வதேச ரீதியில் எழுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
