ரஷ்ய இராணுவ ஜெனரல் மீதான துப்பாக்கி சூடு...! துபாயில் சிக்கிய சந்தேக நபர்
ரஷ்ய இராணுவ ஜெனரலைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடிய முக்கிய குற்றவாளி துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் ரஷ்யாவின் புறநகர்ப் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்த ஜெனரலை நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடிய நிலையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தன்று ஜெனரல் பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் ரஷ்ய காவல்துறையினர் முன்னெடுத்த தீவிர தேடுதலில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரகசியத் தகவல்
குற்றவாளி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சர்வதேச காவல்துறையான இன்டர்போல் (Interpol) உதவியுடன் துபாய் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட நபர் விரைவில் ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்படவுள்ளதுடன், அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சதித்திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளிவரும் என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் காரணமாகவே இந்தக் கைது நடவடிக்கை மிகக் குறுகிய காலத்தில் சாத்தியமானதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |