விமான தடை தொடர்பில் புடின் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பார்!!
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமான விவகாரம் தொடர்பில் ரஷ்ய அரச புடின் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பார் ரஷ்ய சுற்றுலா பயணி எலோனா மெசன்கோவா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் 'ஏரோபுளோட் ' விமானம் ஒன்றினை இலங்கையில் இருந்து வெளியேற இலங்கை கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தடை விதித்து.

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யர்கள் ரஷ்ய அரச தலைவர் புட்டினின் உத்தரவுக்கு அமைய இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
ரஷ்யா திரும்புவதற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையம் வந்த ரஷ்ய சுற்றுலா பயணிகளில் பலர், விமான நிலைய உள் நுழையும் பகுதியில் வைத்து ஊடகங்களிடம் பேசினர்.
இதில் எலோனா மெசன்கோவா என்பவர் பிவருமாறு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.

ரஷ்ய சுற்றுலா பயணியின் கருத்து
"14 நாட்கள் சுற்றுலா பயணமாக நாம் இலங்கை வந்தோம். எனினும் 7 நாட்களில் நாம் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டுள்ளது. நாம் ஹிக்கடுவையில் இருந்தோம். அப்போது தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. இதனால் எம்மை நாடு திரும்புமாறு எமது அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது.
முன்னதாக எமக்கு எமது அரசாங்கம், இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்ல முடியும் என கூறி எம்மை ஊக்குவித்தது. அரசாங்கமே எம்மை இவ்வாறு இங்கு சுற்றுலா பயணத்துக்காக அனுப்பினர்.
எரிபொருள், மின்சார பிரச்சினைகளிடையேயும் நாம் மிக விருப்பத்துடன் சுற்றுலா பயணத்தை அனுபவித்தோம். எனினும் திடீரென ஏற்பட்ட இந் நிலைமையை எம்மாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. நாமும் கவலையடைகிறோம்.
ரஷ்ய சுற்றுலா பயணிகளால், இலங்கைக்கு அந்திய செலாவணி மெருமளவு கிடைத்தது. எனினும் இப்போது இந்த நடவடிக்கையால் அது சாத்தியமற்று போயுள்ளது.
இந்த விமான தடை தொடர்பில் ரஷ்ய அரச தலைவர் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நினைக்கின்றேன். இந்த சம்பவத்தால் எதிர் காலத்தில் கூட ரஷ்யர்கள் இலங்கைக்கு சுற்றுலா பிரயாணம் வர பின்வாங்கலாம்.
ரஷ்யாவின் விமானங்கள் எந்த காரணத்துக்காகவும் கைப்பற்றப்பட மாட்டாது அல்லது தடை செய்யப்படமாட்டாது என இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எழுத்து மூல உடன்படிக்கை இருக்கும் நிலையில், ஐரோப்பாவின் சிறிய காப்புறுதி நிறுவனம் ஒன்றுக்காக, ஆயிரக் கணக்கான ரஷ்யர்களை அசெளகரியப்படுத்தியது புதுமையளிக்கிறது.
எதிர்கால சுற்றுலாத் துறையையே சவாலுக்கு உட்படுத்தி இலங்கை தனது அந்திய செலாவணி மார்க்கத்தையே மூடியுள்ளமை வியப்பாக உள்ளது.
ரஷ்யாவுக்கு செல்லும் இறுதி விமானத்தில் நாமும் செல்வதற்காகவே வந்துள்ளோம்" என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம்!! புடின் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்