கோட்டாபய அரசாங்கத்தின் ஏமாற்றுவேலை - சஜித் ஆதங்கம்

srilanka sajith premadasa
By Vasanth Apr 06, 2021 02:05 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த கோட்டாபய - மஹிந்த அரசாங்கம், வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற அதிக தாமதம் செய்வது ஏன் என்று எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சிக்குவந்து ஓரிரு மாதங்களில் இந்த விசாரணைகளை முடிவுறுத்தியிருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், அமெரிக்கத் தாக்குதல்களை விசாரணை செய்த பாணியில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஷஹ்ரான் காசீம், தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா அரசு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சாலியை தொடர்புகொண்டிருந்தார் எனக் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது நளின் பண்டார குறிப்பிட்டிருந்தார்.

நளின் பண்டாவின் இந்தக் கருத்துக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய நளின் பண்டாரவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்திருந்தனர். அந்த வகையில் இன்று முற்பகலில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் பலமணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைக்காக நளின் பண்டார முன்னிலையான போது அவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் சஜித் பிரேமதாஸ, ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகளை அரசாங்கமே அம்பலப்படுத்த வேண்டும். இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகள், உதவிசெய்தோரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையளிப்பதற்கான கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.

அதனை தேர்தல்காலத்தில் அரச தரப்பினரே வாக்குறுதியாகக் கூறிவந்தார்கள். தாக்குதலுக்குப் பின்னால் இருப்போர் அம்பலமாகவில்லை என்பதையே நாங்களும் மக்களும் நினைக்கின்றார்கள். உண்மையை கண்டறியவே மக்கள் ஆணையை இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றனர்.

எமது அரசாங்கத்தின் காலத்தில்தான் ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு தற்போது இந்த அரசாங்கத்தின் காலத்தில் அறிக்கை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்து பின்பற்றப்பட்ட நடவடிக்கையை இந்த அரசாங்கமும் பின்பற்ற வேண்டும் என யோசனை முன்வைக்கின்றேன்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் மிகவும் தாமதமாகும். 2019ஆம் ஆண்டில் ஆட்சிக்குவந்த அரசாங்கம், புதிய விசாரணைக் குழுவை அமைத்து, வெளிநாட்டிலுள்ள நிபுணர்களை இணைத்துக்கொண்டு சில மாதங்களில் விசாரணையை நிறைவுபடுத்தியிருக்கலாம். கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கின்ற அதிருப்திகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்தி உண்மையை அறிவதில் இந்த அரசாங்கம் இன்னும் தாமதிக்கின்றது. மக்களிடம் இருந்து தகவல்கள் மறைக்கப்படுகின்றதா? கர்தினாலின் கருத்துக்களே இன்று மிகத்தெளிவாக இருக்கின்றன.

தீவிரவாத செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள தண்டனைகள், சட்டங்களே இங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025