கெரவலபிட்டி மின்நிலைய வளர்ச்சியை தடுப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் - பங்காளி கட்சிகளை சாடிய சாகர
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை 10 ஆண்டுகளாக இயற்கை எரிவாயு மின்நிலையமாக மாற்ற முடியாத நிலையில் அதற்கான முயற்சியில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் மின் நிலையத்தின் செயற்பாடுகளுக்கு சிலர் அர்த்தமற்ற வகையிலேயே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றும் அதன் பங்குகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே இத்தகைய வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சியை எதிர்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
குறித்த எரிசக்தி துறை முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மிக முக்கியமான துறை என்பதனால் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தள்ளார்.