அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: கைவிரித்த அரசாங்க தரப்பு
அரச ஊழிர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்படுவது தொடர்பில் வாக்குறுதி வழங்க முடியாது என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது தொடர்ந்து உரையாற்றி அவர், “இந்த மண்டபத்தில் பெண்கள் குறைவு, நான் ஒரு கண்கெடுப்பு எடுத்தேன் ஆனால் தேவையில்லை என்று நினைத்தேன்.
சம்பளம் அதிகரிப்புக்கான காரணங்கள்
பெண்களின் கண் புருவம் வடவமைக்க இப்போது எவ்வளவு செலவாகிறது.கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு இருந்தது என்று தெரியாது.ஆனால் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அதிகரிக்கப்படும் சம்பளப் பணம் அழகுப்படுத்தும் நிலையங்களுக்கும் மதுபாசானைகளுக்கும் செல்கிறது.
சம்பளம் அதிகரிப்பது உங்களுக்காக மட்டுமல்ல, பணப் புரள்வு நடைபெற வேண்டும்.அப்போது தான் பொருளாதாரம் உயர்வடையும்.ஆகையால் அதற்காகவும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.
தொழிற் சங்க நிகழ்வுகளில் உரையாற்றும் போது பயமாகத்தான் இருக்கிறது. இப்போது நான் அமைச்சராக இருக்கிறேன் ஆனால் எனது தொழிற்சங்க தலைமைப் பதவி மற்றும் அமைச்சு ஆகிய இரண்டையும் பாதுகாத்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
