பாலியல் குற்றசாட்டில் சிக்கிய பிள்ளையானின் சகாக்கு விளக்கமறியல் !

Batticaloa Shanakiyan Rasamanickam Sri Lanka
By Shalini Balachandran Aug 07, 2024 01:21 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report
புதிய இணைப்பு

பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவ நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ள நிலையில் இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் கைது 

இருப்பினும், ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்யவில்லையென இரா.சாணக்கியன் நேற்றைய தினம் (06) நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியதை அடுத்து இன்று (07) சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது.

பாலியல் குற்றசாட்டில் சிக்கிய பிள்ளையானின் சகாக்கு விளக்கமறியல் ! | Sammanthan Speech In Parliament Yesterday

கடந்த காலங்களில் பல போலி முகநூலுடாக பல பெண்களது வாழ்க்கையை சீரழித்தும், தனது தலைவருக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வந்த சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலருக்கு போலி முகநூல் ஊடாக முகம் சுளிக்கும் வகையில் பதிவுகளை மேற்கண்ட நபர் இன்று சட்டத்தின் நிறுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

முதலாம் இணைப்பு

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (Shivanesathurai Chandrakandan)  கட்சி ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiyan Rasamanickam ) குற்றம் சுமத்தியுள்ளார்.

இவரை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் இதுவரை அவர் கைது செய்யப்படாத நிலையில் இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சரின் நிலைப்பாடு என்னவென இரா. சாணக்கியன், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவிடம் (Sushil Premajayantha) நேரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று (06) விசேட கூற்றை முன்வைத்து இவ்வாறு கேள்வி எழுப்பிய இரா. சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பிரதான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் (Gopinath) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

உங்களிடமிருந்து கற்றோம் : இலங்கை போராளிகளுக்கு நன்றி : வங்கேதேசத்திலிருந்து வந்த அறிவிப்பு

உங்களிடமிருந்து கற்றோம் : இலங்கை போராளிகளுக்கு நன்றி : வங்கேதேசத்திலிருந்து வந்த அறிவிப்பு

ஜனாதிபதி செயலகம் 

இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ளார் அத்தோடு இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பாலியல் குற்றசாட்டில் சிக்கிய பிள்ளையானின் சகாக்கு விளக்கமறியல் ! | Sammanthan Speech In Parliament Yesterday

இருப்பினும், இந்த ஆசிரியரை காவல்துறையினர் இன்று வரை கைது செய்யவில்லை தனது சட்டத்தரணி ஊடாக அவர் நீதிமன்றில் முன்னிலையாகுவார் என்று காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

நாமலுக்கு ஏற்பட்ட கெட்ட சகுனம்

நாமலுக்கு ஏற்பட்ட கெட்ட சகுனம்

நாடாளுமன்ற உறுப்பினர்

காவல்துறையினரின் கடமை இதுவல்ல கோபிநாத் என்ற இந்த ஆசிரியர் தான் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகின்றார்.


இந்த மாணவியிடம் 'நான் குறிப்பிடுவதை போல் இருக்காவிடின் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்' என்று இந்த ஆசிரியர் மிரட்டியுள்ளார் அத்தோடு இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்படவில்லை இது தேசிய பாடசாலை ஆகவே இந்த பிரச்சினைக்கு கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்துள்ளேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, “சபாநாயகரே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் நான் தகவல்களை கேட்டுள்ளேன் கல்வி அமைச்சு ஊடாக தலையிட்டு உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறு குறித்த சிரேஷ்ட பதில் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பு

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024