யாழில் மணல் கடத்தல் : தப்பிச் செல்ல முயன்ற டிப்பரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனமொன்றை பருத்தித்துறை காவல்துறையினர் அதிரடியாக மடக்கி பிடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வல்லிபுரம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், மந்திகை சந்தி அருகே காவல்துறையினர் வழிமறித்தபோது நிற்காமல் தொடர்ந்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து டிப்பரை துரத்திச் சென்ற காவல்துறையினர் வாகனத்தின் டயரின் மீது ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனால் டயரின் காற்று வெளியேறியதால் வாகனத்தை இயக்க முடியாமல் போயுள்ளது.
பின்னர், வாகனத்தை வீதியில் கைவிட்டுவிட்டு தப்பியோட முயன்ற சாரதியை, காவல்துறையினர் விரைந்து சென்று மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர், டிப்பர் வாகனத்துடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
