பட்டலந்த விசாரணை குறித்து சத்தியலிங்கத்தின் அவசர கோரிக்கை

Sri Lanka Current Political Scenario Pathmanathan Sathiyalingam
By Shalini Balachandran Apr 11, 2025 06:18 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

அரசியல் காரணத்திற்கு அல்லாமல் பட்டலந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (11) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் "எமது நாட்டில் இடம்பெற்ற பாரதூரமான கொலைகள் தொடர்பான குற்றங்கள், நீதித்துறைக்கு விரோதமான கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவை போன்ற பல விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வற் வரி திருத்தம் மீதான சட்டமூலத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

வற் வரி திருத்தம் மீதான சட்டமூலத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

பல்வேறு அறிக்கைகள் 

இந்த அறிக்கை 35 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் இப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பட்டலந்த விசாரணை குறித்து சத்தியலிங்கத்தின் அவசர கோரிக்கை | Sathyalingam S Request In The Patalanta Issue

இதுபோன்ற பல அறிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்கில் நிலவிய யுத்த காலத்தின் போதும், மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சிக் காலத்தின் போதும், நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான யுத்தக் குற்றங்கள் போன்ற பல விடயங்களைக் கொண்ட பல்வேறு அறிக்கைகள், பட்டலந்த அறிக்கையைப் போன்று பல வருடங்களாக ஆராயப்படாமல் களஞ்சியங்களில் இருக்கின்றன.

இவ்வாறான அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்து அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அதனை அப்படியே கைவிட்ட வரலாறுகள் உள்ளன.

கிழக்கில் பாரிய ஊழல் மோசடியில் சிக்கிய சாணக்கியன் : அம்பலமான குற்றச்சாட்டு

கிழக்கில் பாரிய ஊழல் மோசடியில் சிக்கிய சாணக்கியன் : அம்பலமான குற்றச்சாட்டு

முறையான விசாரணை

அதனால் இந்த அறிக்கையை விவாதிப்பது மட்டுமன்றி அறிக்கையில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான முறையான விசாரணைகளை நடத்த வேண்டும், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அவர்களைப் பொறுப்புக் கூறுபவர்களாக இருக்க வேண்டும், இந்தப் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதன் ஊடாக இவ்வாறான குற்றங்கள் மீள ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டலந்த விசாரணை குறித்து சத்தியலிங்கத்தின் அவசர கோரிக்கை | Sathyalingam S Request In The Patalanta Issue

இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இதேபோன்று மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், நீதிக்கு புறம்பான கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பாமை, போர்க் குற்றங்கள் போன்றவை பல அறிக்கைகளில் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனால், அந்த அறிக்கைகளை எடுத்து நடவடிக்கை எடுக்கும் போது நாட்டுக்காகப் போராடியவர்களைக் காட்டிக்கொடுப்பதாக இங்குள்ள அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.  

சற்றுமுன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கெஹெலிய

சற்றுமுன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கெஹெலிய

ஆணைக்குழுக்களின் அறிக்கைகள்

எத்தனை அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம் என்பதில் பிரச்சினையில்லை.

ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாக இருந்திருந்தால், யுத்தத்தின் இறுதிப்பகுதியில் போர்க்குற்றங்களைச் செய்தவர்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தோர் பயத்திலேயே அதைச் செய்திருக்க மாட்டார்கள்.

பட்டலந்த விசாரணை குறித்து சத்தியலிங்கத்தின் அவசர கோரிக்கை | Sathyalingam S Request In The Patalanta Issue

எவ்வாறாயினும் அறிக்கைகளில் உள்ள முடிவுரைகளுக்கமைய சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதன் ஊடாக நாட்டில் இவ்வாறான குற்றங்கள் மீள நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.

நாங்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டும் இந்த அறிக்கைகளைப் புரட்டாமல், இந்த நாடு ஒரு அமைதியான எல்லா மக்களும் வாழக் கூடிய நாடாக மாற வேண்டுமாக இருந்தால் இந்த ஆணைக்குழு அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த இந்த அரசாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்