அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து : உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
2022 ஆம் ஆண்டு 'அரகலய' போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (23) எடுத்துக்கொள்ளப்பட்ட போது உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உரிமை மீறலுக்கு, அப்போதைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோரே பொறுப்பு என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
அடிப்படை உரிமை மீறல்
அநுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை விசாரணை செய்ததன் பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாகவும், அப்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் மூலம் கடுமையாக விமர்சித்ததாலும், 2022 ஏப்ரலில் சாதாரண உடையில் இருந்த ஒரு குழுவினரால் அனுருத்த பண்டார அழைத்துச் செல்லப்பட்டார்.
பல மணிநேரம் அவரது இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினருக்கோ அல்லது வழக்கறிஞர்களுக்கோ எந்தத் தகவலும் வழங்கப்படாததால், அவரை மறைத்துவிடும் நோக்கத்துடன் இது ஒரு கடத்தல் என்ற கருத்து எழுந்தது.
எனினும், தண்டனைச் சட்டத்தின் 120வது பிரிவின்படி, அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்தல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களைக் கலக்கமடையச் செய்யும் செய்திகளைப் பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மொதறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தது பின்னர் தெரியவந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 5 மணி நேரம் முன்