பற்றாக்குறை நிலவிய 14 வகை மருந்துகள் இறக்குமதி - சுகாதார அமைச்சு
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Drugs
By Kathirpriya
நாட்டில் பற்றாக்குறை நிலவிய 14 வகையான மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் நிலவிய மருந்துப் பற்றாக்குறை 242 ஆக குறைவடைந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய கடனுதவி திட்டத்தினூடாக நூற்றுக்கும் அதிக மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்த மாதத்திற்குள் இந்த மருந்துகள் நாட்டிற்கு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவை தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.