நாளை பாடசாலைகள் ஆரம்பம் - கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
school
student
uniform
By Vanan
நாடளாவிய ரீதியில் நாளை(25) அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் மீளத் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் சீருடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய கட்டாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் மக்களது நிலைமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஆரம்ப பிரிவு வகுப்பு மாணவர்கள் தம்மிடம் இருக்கின்ற ஏதேனும் ஒரு ஆடையுடன் பாடசாலை செல்ல முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.