கடமையில் இருந்த காவல்துறையினர் மீது கத்திக் குத்து!
Police
SriLanka
Attrack
By Chanakyan
முகத்துவாரம் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறையின் கான்ஸ்டபிள்கள் மீது கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளனர என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்த முற்பட்ட போது குறித்த நபர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.