நுவரெலியாவில் ஏரியில் வீழ்ந்து விமானம் விபத்து
Sri Lanka Police
Nuwara Eliya
Accident
Flight
By Thulsi
நுவரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம் (Seaplane) ஒன்று, ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (07) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்று காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் குழு
விபத்தின் போது விமானத்தில் 2 விமானிகள் (Pilots) மாத்திரமே இருந்துள்ளனர்.

காயமடைந்த இரண்டு விமானிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 7 மணி நேரம் முன்
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்…
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி