இலங்கை கடற்படையின் செயல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறி வன்மத்தின் வெளிப்பாடே..! சீமான் ஆவேசம்

Indian fishermen Sri Lanka Seeman India Sri Lanka Navy
By Dilakshan Oct 16, 2023 12:40 PM GMT
Report

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களையும் , அபகரிக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கை இனவாத அரசினுடைய கடற்படை கடந்த 14.10.2023 அன்று அதிகாலையில் இராமேஸ்வரத்தை சேர்ந்த 27 கடற்றொழிலாளர்களை அத்துமீறி கைது செய்திருப்பதோடு, அவர்களது 5 விசைப்படகுகளையும் அபகரித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்!

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்!


தமிழர்கள் மீதான இனவெறி 

இது தொடர்பாக மேலும் அந்த அறிக்கையில், “இனவெறி சிங்கள கடற்படையால் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படும் கொடுமைகள் தொடர்ந்து வருவது இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.

இலங்கை கடற்படையின் செயல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறி வன்மத்தின் வெளிப்பாடே..! சீமான் ஆவேசம் | Seeman Urges For Indian Fishermen Issue Sri Lanka 

தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளைப் பறித்துக்கொள்வது, வலைகளை அறுப்பது, படகுகளைச் சேதப்படுத்துவது, உடைமைகளைப் பறித்துக்கொள்வது, கடற்றொழிலாளர்களைச் சிறைப்பிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் ஈவிரக்கமற்ற வன்முறை தாக்குதல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறி வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இதுவரை பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளதோடு, 800க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக கடற்றொழிலாளர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், இலங்கை இராணுவத்தின் இக்கோரத் தாக்குதல்களுக்கு இதுவரை இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை.

தனியார் கல்வி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்படும் யாழ் அதிபர் மாளிகை!

தனியார் கல்வி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்படும் யாழ் அதிபர் மாளிகை!


தமிழ்நாட்டு கடற்றொழிளார்கள்

எவ்வித எதிர்வினையும் ஆற்றியதுமில்லை. பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தமிழக கடற்றொழிலாளர்களின் மீதான தாக்குதல்களை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது.

இலங்கை கடற்படையின் செயல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறி வன்மத்தின் வெளிப்பாடே..! சீமான் ஆவேசம் | Seeman Urges For Indian Fishermen Issue Sri Lanka

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதுவதை தவிர, எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப்போக்கினாலேயே தமிழ் கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர் கதையாகிவிட்டது.

பாஜகவும், திமுகவும் தமிழக கடற்றொழிலாளர்கள் அழிக்கப்படுவதை கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றன. கூட்டணி பலத்துடன் சேர்த்து 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை திமுக வைத்திருந்தும் அதன் மூலம் ஒரு சிறு நன்மையைக்கூட தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை காக்க இதுவரை செய்யவில்லை என்பது வரலாற்றுப் பெருந்துரோகம்.

ஆகவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த  27 கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக அரசு கட்சத்தீவினை மீட்போம் என வழக்கமான வெற்று முழக்கத்தை வைக்காமல், இனியாவது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுப்படுத்தி கட்சத்தீவினை மீட்க உறுதியான நடவடிக்கை எடுத்து தமிழக கடற்றொழிலாளர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்தே தீரும்: ரணிலை புகழும் சுசில் பிரேமஜயந்த

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்தே தீரும்: ரணிலை புகழும் சுசில் பிரேமஜயந்த


ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026