கொழும்பில் கைப்பற்றப்பட்ட சொகுசு வீடுகள் குறித்து சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Colombo Sri Lanka Easter Attack Sri Lanka
By Sathangani Mar 27, 2024 06:50 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசங்களில் அமைந்துள்ள இரண்டு சொகுசு வீடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வீடுகள் அல்கய்தா மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம முன்வைத்த விடயங்களை பரிசீலித்த ப்ரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் மகிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் அதிபர் எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

​​பயங்கரவாதத் தாக்குதல்

இந்த மனுக்கள் நேற்று (26) பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது, ​​பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் குறித்த இரு வீடுகளிலும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கைப்பற்றப்பட்ட சொகுசு வீடுகள் குறித்து சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல் | Seizure Of Houses Used For Terrorist Activities

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் லுக்மான் தாலிப் என்ற நபர் இந்த வீடுகளின் உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக விசாரணைகளில் உண்மைகள் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்ததோடு, குறித்த வீடு தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் அல்கய்தாவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த வீடுகள் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்

தமக்கு வழங்கப்பட்ட திருப்திகரமான தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வீடுகளை காவலில் வைக்குமாறு காவல்துறையினருக்கு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகள் இந்த உத்தரவின் மூலம் மீறப்படாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கைப்பற்றப்பட்ட சொகுசு வீடுகள் குறித்து சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல் | Seizure Of Houses Used For Terrorist Activities

அதனடிப்படையில் குறித்த மனுக்களை நிராகரிக்குமாறு நீதிமன்றில் மேலும் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரைக் காவலில் வைக்கும் உத்தரவு முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என அதிபர் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனா வைத்த செக்! ஒன்பது ஒப்பந்தங்களில் கைச்சாத்து

இலங்கைக்கு சீனா வைத்த செக்! ஒன்பது ஒப்பந்தங்களில் கைச்சாத்து

மனுக்களை தள்ளுபடி செய்ய முடிவு

விசாரணைகளின் போது அரசாங்க சட்டத்தரணி குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகவில்லை என அதிபர் சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கைப்பற்றப்பட்ட சொகுசு வீடுகள் குறித்து சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல் | Seizure Of Houses Used For Terrorist Activities

நீண்ட நேரம் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுக்களை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.

இந்த நிலையில் இரண்டு வீடுகளின் உரிமையாளர்களான மொஹமட் ஹியத்துல்லா மற்றும் மொஹமட் ஹசீம் ஆகியோர் மனுக்களை சமர்ப்பித்திருந்ததுடன், சட்டமா அதிபர்,  காவல்துறை மா அதிபர், பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிட்ததக்கது.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..



ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024