நாளை முதல் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்: வெளியான மகிழ்ச்சித் தகவல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Aswasuma
By Dilakshan
செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு நாளை (26) சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை இன்று(25.09) வெளியிட்டுள்ளது.
முதியோர் கொடுப்பனவு
அதன்படி, 602,852 பயனாளிகளுக்கு ரூ. 3,014,260,000 விநியோகிக்கப்படும் என்றும், அவர்களின் கொடுப்பனவு பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பயனாளிகள் செப்டம்பர் 26 முதல் தங்கள் முதியோர் கொடுப்பனவுகளை சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக் கொள்ளமுடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
