விகாரைக்கு சென்ற சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய நபர் கைது!
கம்பஹாவின் நிட்டம்புவ பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொக்காவெவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட அலுத் திபுல் ஏரி பகுதியில் விகாரை நடத்தி வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ, கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி தனது தாயுடன் பூஜை நடவடிக்கைக்காக விகாரைக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற போது, சிறுமியின் உடலில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகக் கூறி, குறித்த நபர் சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
சிறுமியையும் தாயையும் பூஜை செய்து கொண்டிருந்த போது, சிறுமிக்கு ஏற்பட்டுள்ள அமானுஷ்ய சக்திகளை அகற்ற தேவையான வேலைகளை தயார் செய்த பின்னர், தாயாரை வெளியே செல்லுமாறு கபுவா எனப்படும் விகாரையின் பாதுகாவலர் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த சந்தேக நபர் சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும்
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
