எந்த அருகதையும் இல்லை : சாணக்கியனுக்கு சாட்டையடி கொடுத்த ஜனா
என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு எந்த அருகதையும் இல்லையென தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (govindan karunakaram) தெரிவித்தார்.
மட்டக்களப்பில் (Batticaloa) இன்று (13.06.2025) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நான் 30 வருடத்திற்கும் மேலாக ஒரே கட்சியிலேயே பயணித்து வருகின்றேன்.
உங்களைப்போல் பல்வேறு கட்சியிலும் தொங்கி வந்தவன் நான் இல்லை. 43 வருடங்களாக ஒரே கட்சியில் இருப்பவன் நான் என்னை கட்சியிலிருந்து விலகச் சொல்ல சாணக்கியனுக்கு என்ன அருகதை இருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் போது ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்து வருகின்ற போதிலும் தங்களது கட்சியின் அரசியல் இருப்புக்காக எதிரணி உறுப்பினர்களுடன் இரகசியமான முறையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளூராட்சி சபைகளை ஆட்சி அமைத்து வருகின்றார்.
அவர்களது கட்சி நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்ற போது எம்மை விமர்சிக்க இவருக்கு என்ன அருகதை இருக்கிறது. சாணக்கியன் எனது வீடு தேடி ஆதரவு கேட்டுவிட்டு எனக்கு எதிராக இன்று போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
