விரக்தியுடன் விடைபெறும் சவேந்திர சில்வா
சவேந்திர சில்வா
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பதவி விலகியதன் பின்னர் மிகக் குறைந்த நாட்களே பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ மரபுப்படி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவி மரியாதை நிமித்தமாக வரையறுக்கப்பட்ட நாட்கள் மட்டுமே நீடிக்கும். அதன் பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
நாடளாவிய மக்கள் எழுச்சி
நாடு முழுவதும் சமீபகாலமாக நடந்த மோதல்களில் மக்களுக்காக குரல் கொடுத்ததாக அரசியல்வாதிகளால் அவர் மீது மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது.
அந்தவகையில், இராணுவத் தளபதி தனது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கான சுதந்திரமான சூழல் இன்மையால் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத் தளபதி அரசியல்வாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என உயர் அரசியல் அதிகாரிகளினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
