ஊரடங்கு தளர்வு குறித்த இறுதித் தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி!
corona
lock down
shavendra silva
press meet
sri Lanka
By Kalaimathy
நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் எனினும் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்ட பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவையை பராமரித்துச் செல்லும் முறையை தயாரிப்பதற்காக கொவிட் செயலணியினால் குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டு மக்கள் தொகையில் 52.3 சதவீதமானோருக்கு இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்