கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூடு! காலியில் எரிந்து கிடந்த சந்தேகநபர்களின் வாகனம்
தலங்கம, அகுரேகொடவில் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைக் கொல்ல துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் முற்றாக எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரை காலி அகலிய - குட்டியாவத்தையில் உள்ள துணை வீதியில் இருந்து, நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி கொல்ல பயன்பட்டதாக கூறப்படும் கார் காலி அகலிய பகுதியில் கைவிடப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சென்று பார்த்தபோது கார் எரிந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
தலைமறைவாக உள்ள குற்றவாளி
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஜயலத் சில்வா எனப்படும் கரந்தெனியே சுத்தா என்ற பாதாள உலக குற்றவாளியால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்கிற்கும், பின்னர் அவரது முக்கிய போட்டியாளரான "லொகு பெட்டி" என்ற குற்றவாளியின் சட்டத்தரணியாகவும் முன்னிலையாகியுள்ளார்.
அதன்படி, லோகு பெட்டிக்கு கரந்தெனிய சுத்தா பற்றிய தகவல்களை குறித்த சட்டத்தரணி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சுத்தாவின் தரப்பினரால் இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 3 மணி நேரம் முன்