தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது துப்பாக்கிசூடு - பலர் பலி -தாய்லாந்தில் கோர சம்பவம்

Shooting Thailand Death
By Sumithiran Oct 06, 2022 04:58 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 குழந்தைகள் பராமரிப்பு நிலையம் மீது துப்பாக்கிசூடு

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல்நேர பராமரிப்பு நிலையத்திலேயே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்கு ஏராளமான குழந்தைகள் காலை முதல் மாலை வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இன்று வழக்கம் போல் பெற்றோர் தங்களது குழந்தைகளை பராமரிப்பு நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கு வந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் குழந்தைகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தவேளை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சராமரியாக சுட்டுள்ளார்.

தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது துப்பாக்கிசூடு - பலர் பலி -தாய்லாந்தில் கோர சம்பவம் | Shooting At Childcare Center In Thailand

 தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள்

இந்த பராமரிப்பு நிலையத்தில் 92 குழந்தைகள் வருவதாகவும் ஆனால் மோசமான வானிலை மற்றும் பேருந்து பழுது காரணமாக இன்றையதினம் 24 குழந்தைகள் மட்டுமே வருகை தந்ததாக பராமரிப்பு நிலையத்தின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

அத்துடன் தாக்குதலுக்கு சிறிது நேரத்திற்கு முன்னர் குழந்தைகள் அனைவரையும் தூங்க அனுப்பிவிட்டு தான் மதிய உணவு தயாரிக்க சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஒரு குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த தாக்குதல்கள் குறித்த மேலதிக தகவல்களை தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

"குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர், குற்றவாளி உள்ளே நுழைய முயன்றதை நாங்கள் கண்டறிந்தோம், மேலும் அவர் முக்கியமாக கத்தியைப் பயன்படுத்தி பல குழந்தைகளைக் கொன்றார், மேலும் சிலர் உயிர் பிழைத்துள்ளனர்" என்று தாய்லாந்து தேசிய காவல்துறைத் தலைவர் டம்ரோங்சாக் கிட்டிபிரபட் கூறினார்.

காவல்துறையின் அறிவிப்பு

"பின்னர் அவர் வெளியே வந்து, தனது வீட்டிற்கு வரும் வரை வழியில் சந்தித்தவர்களை துப்பாக்கி அல்லது கத்தியால் கொல்லத் தொடங்கினார். நாங்கள் வீட்டைச் சுற்றி வளைத்தோம், பின்னர் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டறிந்தோம்."

தாக்குதல் நடந்த அன்று காலை, சந்தேக நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு வரவிருந்தார். "சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும், அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. அதனால், அவர் குற்றங்களைச் செய்ய காரணமான மன அழுத்தத்துடன் மாயத்தோற்றம் கொண்டவராக இருக்கலாம். அவர் குழந்தைகள் தினப்பராமரிப்பு மையத்தில் தொடங்கி அவரது வீடு வரை தனது குற்றத்தை எல்லா வழிகளிலும் தொடர்ந்தார். "எனத் தெரிவித்துள்ளனர்.

படங்கள் -ரொய்ட்டர்ஸ்


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026