தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது துப்பாக்கிசூடு - பலர் பலி -தாய்லாந்தில் கோர சம்பவம்

Shooting Thailand Death
By Sumithiran Oct 06, 2022 04:58 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 குழந்தைகள் பராமரிப்பு நிலையம் மீது துப்பாக்கிசூடு

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல்நேர பராமரிப்பு நிலையத்திலேயே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்கு ஏராளமான குழந்தைகள் காலை முதல் மாலை வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இன்று வழக்கம் போல் பெற்றோர் தங்களது குழந்தைகளை பராமரிப்பு நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கு வந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் குழந்தைகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தவேளை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சராமரியாக சுட்டுள்ளார்.

தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது துப்பாக்கிசூடு - பலர் பலி -தாய்லாந்தில் கோர சம்பவம் | Shooting At Childcare Center In Thailand

 தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள்

இந்த பராமரிப்பு நிலையத்தில் 92 குழந்தைகள் வருவதாகவும் ஆனால் மோசமான வானிலை மற்றும் பேருந்து பழுது காரணமாக இன்றையதினம் 24 குழந்தைகள் மட்டுமே வருகை தந்ததாக பராமரிப்பு நிலையத்தின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

அத்துடன் தாக்குதலுக்கு சிறிது நேரத்திற்கு முன்னர் குழந்தைகள் அனைவரையும் தூங்க அனுப்பிவிட்டு தான் மதிய உணவு தயாரிக்க சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஒரு குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த தாக்குதல்கள் குறித்த மேலதிக தகவல்களை தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

"குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர், குற்றவாளி உள்ளே நுழைய முயன்றதை நாங்கள் கண்டறிந்தோம், மேலும் அவர் முக்கியமாக கத்தியைப் பயன்படுத்தி பல குழந்தைகளைக் கொன்றார், மேலும் சிலர் உயிர் பிழைத்துள்ளனர்" என்று தாய்லாந்து தேசிய காவல்துறைத் தலைவர் டம்ரோங்சாக் கிட்டிபிரபட் கூறினார்.

காவல்துறையின் அறிவிப்பு

"பின்னர் அவர் வெளியே வந்து, தனது வீட்டிற்கு வரும் வரை வழியில் சந்தித்தவர்களை துப்பாக்கி அல்லது கத்தியால் கொல்லத் தொடங்கினார். நாங்கள் வீட்டைச் சுற்றி வளைத்தோம், பின்னர் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டறிந்தோம்."

தாக்குதல் நடந்த அன்று காலை, சந்தேக நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு வரவிருந்தார். "சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும், அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. அதனால், அவர் குற்றங்களைச் செய்ய காரணமான மன அழுத்தத்துடன் மாயத்தோற்றம் கொண்டவராக இருக்கலாம். அவர் குழந்தைகள் தினப்பராமரிப்பு மையத்தில் தொடங்கி அவரது வீடு வரை தனது குற்றத்தை எல்லா வழிகளிலும் தொடர்ந்தார். "எனத் தெரிவித்துள்ளனர்.

படங்கள் -ரொய்ட்டர்ஸ்


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016