அவுஸ்திரேலியாவை அதிர வைத்த சம்பவம் - மூவர் ரத்த வெள்ளத்தில்..! ஹெலிகொப்டரில் மீட்பு பணி
அவுஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குயின்ஸ்லாந்து - போகியில் உள்ள கால்நடைகள் பண்ணை மீது நேற்று (04) பயங்கர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் தோய்ந்து உயிரிழந்ததுடன், மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மூவர் ரத்த வெள்ளத்தில்
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்துசென்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவரை மீட்டு, ஹெலிகொப்டர் மூலம் மக்கே நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள், படுகாயமடைந்தவரது உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி விட்டார். அவரை தேடும் வேட்டையை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அவுஸ்திரேலியாவை அதிர வைத்துள்ளது.