இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு - ஒரு மாத காலத்தில் 10 மரணங்கள் பதிவு
இலங்கையில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு
இலங்கையின் பல பகுதிகளில் கடந்த ஒரு மாத காலத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு - களனி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன.
பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான மோதல்
நேற்றிரவு பேலியகொடை தொடருந்து நிலைய வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவானது. இதன்போது, முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் பலியானார்.
அவர் தமது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவர் மீது இரண்டு பேரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் அத்தனாயக்க என்ற பெயரில் அழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
