கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு - அமைச்சரவை இணை பேச்சாளர் வெளியிட்ட அறிவிப்பு
SriLanka
CoronaVaccine
RameshPathirana
By Chanakyan
இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்கு தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தின் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதற்கான ஆபத்து இருந்தாலும், அதைச் சமாளிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இநத விடயத்தினைத் தெரிவித்தள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்நிலைமை தொடர்பாக அச்சம்கொள்ளத் தேவையில்லை. மேலும் தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை சுகாதார அமைச்சு அதே வழியில் கட்டுப்படுத்தியுள்ளது என்றும் தற்போதைய நிலைமை தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்