கணவன், பிள்ளையென அடுத்தடுத்து இழப்புக்கள்! ஒரு தாயின் கண்ணீர் கதை
போராளியான கணவனையும், விபத்தில் பிள்ளையையும் இழந்து தவிக்கும் தாயுள்ளம் ஆறுதல் கொள்ள வழியில்லா நிலையில், மற்றொரு பிள்ளையும் நோய் வாய்ப்பட்டு துன்பத்தில் உழலும் தாயின் கண்ணீரை என்னவென்று சொல்ல முடியும்.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அவர்களின் வாழ்வாதாரத்துக்காக நாளும் போராடிக்கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள், அதிலும் இலங்கையின் வட பகுதியில் வறுமை பிரச்சினைக்கு பஞ்சம் என்பது என்றுமே குறையாதிருக்கும்.
அந்த வரிசையில் மூன்று தசாப்த யுத்த சூழல் தமிழ் சமூகத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் போராளியாக இருந்த கிருபாகரனின் மறைவிற்கு பின் அவரது துணைவியார் ஆனந்தகலா நெடுங்கேணி பதினேழாம் வட்டாரத்தில் தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென மாறி வரும் பிரச்சினைகள் இவர்கள் குடும்பத்தை விட்டுவைக்கவில்லை.
கணவனை இழந்து பரிதவித்திருந்த வேளை, அவரது இருபத்தொரு வயது நிரம்பிய மகன் விபத்தில் சிக்கி இறப்பதனை பெற்ற தாயால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்.
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற்போல் இளையவன் உயிர்நீத்து எட்டே மாதங்களில் மூத்த மகனின் சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளது என்ற செய்தியும் கிடைக்கிறது.
இப்படி சோகத்தில் மூழ்கியிருக்கும் இந்தக் குடும்பத்தில் பிரச்சினைகள் என்றுமே குறைந்த பாடில்லை.
மாற்று அறுவைச்சிகிச்சைக்கு நிதியின்றியும், மாற்று சிறுநீரகங்கள் இன்றியும் தன் மகன் நாள்தோறும் படும் பாட்டைக் கண்டு இந்த தாயுள்ளம் படும் பாட்டை எவ்வாறு சொல்வதென்று தெரியவில்லை.
இப்படி, இவர்கள் படும் இன்னல்களை சுமந்து வருகிறது ஐபிசி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்