Tuesday, Apr 8, 2025

தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Sri Lankan Peoples Senthil Thondaman
By Dilakshan a year ago
Report

தீபாவளியை முன்னிட்டு றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான், உடனடியாக மேல் மாகாண ஆளுநர் மற்றும் மேல் மாகாண காவல்துறைமா அதிபரின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசென்று பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், பெரும்பான்மையின இளைஞர்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்.

மேல்மாகாணம் களுத்துறை மாவட்டம் றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தீபாவளியை முன்னிட்டு நகர்பகுதி கடைகளுக்கு அல்லது தோட்டத்தை விட்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதியில் வாழும் சில பெரும்பான்மையின இளைஞர்களின் தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வந்துள்ளனர்.

தமிழர் தலைநகரில் கைதான காவல்துறை உத்தியோகத்தர்

தமிழர் தலைநகரில் கைதான காவல்துறை உத்தியோகத்தர்


இன முறுகல்

பெரும்பான்மையின இளைஞர்களின் தாக்குதலில் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்டவர்கள், இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடு செய்தனர்.

தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு | Sinhala Youth Attack Tamil People Solution Senthil

இதுதொடர்பில் விரைந்து செயல்பட்ட செந்தில் தொண்டமான், மேல் மாகாண ஆளுநருக்கு அழைப்பை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் விவரித்துள்ளதுடன், இவ்வாறு தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் அது தமிழ், சிங்கள முறுகல்களுக்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு நேரடியாக செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண ஆளுநர், ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துடன், மேல் மாகாண இ.தொ.கா பிரதிநிதிகளுக்கும், மேல் மாகாண ஆளுனருக்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழ் இளைஞர்களுக்கு தீர்வு

அதன் பிரகாரம் இ.தொ.காவின் உபத் தலைவர்களான திருகேதிஸ், ராஜமணி பிரசாத் ஜீவானந்தம் மற்றும் ஜீவா மாகிரட் ஆகியோர் மேல்மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநரை சந்தித்து முறைப்பாட்டை கையளித்திருந்தனர்.

தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு | Sinhala Youth Attack Tamil People Solution Senthil 

அத்துடன், சம்பவம் தொடர்பில் மேல் மாகாண காவல்துறைமா அதிபரின் கவனத்துக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கொண்டுசென்றதுடன், சம்பவம் தொடர்பில் றைகம காவல்நிலையித்தில் முறைப்பாடளிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்காதுள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டியதுடன், உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களுக்கு தீர்வவை பெற்றுக்கொடுக்க மேல் மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ் இளைஞர்களின் நன்றி

பெரும்பான்மை இன இளைஞர்களை அழைத்து தமிழ் இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுப்பதை கண்டித்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு | Sinhala Youth Attack Tamil People Solution Senthil

அத்துடன், காயங்களுக்கு உள்ளாகியிருந்த தமிழ் இளைஞர்களுக்கு மருத்துவச் செலவுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அதேபோன்று றைகம பகுதியில் காவல்துறையினரை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் உடனடியாக விரைந்து செயல்பட்ட ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு றைகம பகுதி தமிழ் இளைஞர்கள் நன்றித் தெரிவித்துள்ளனர். 

கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: ஒருவர் மரணம்

கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: ஒருவர் மரணம்

 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012