ஈழ நிலத்தின் வலியை உணர்த்தும் “ஆறாம் நிலம்”
ஈழத் தமிழர்களின் வலியையும் - வடுக்களையும் உணர்த்தும் வகையில் இயக்குனர் ஆனந்த ரமணனின் இயக்கத்தில் வெளிவந்த முழுநீளத்திரைப்படம்தான் “ஆறாம் நிலம்”.
இத்திரைப்படம் எமது ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் மிகப்பெரும் தயாரிப்பாக அமைந்திருந்தது. தற்போது இத்திரப்படமானது பார்வையாளர்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு வருகின்றது.
ஆராம் நிலம் திரப்படத்தில் மன்மதன் பாஸ்கி, நவயுகா மற்றும் குழந்தை நட்சத்திரமான அன்பரசி ஆகியோர் கதை கருவுக்கு உயிரோட்டத்தினையும் வழங்கியுள்ளனர்.
அத்துடன் இதில் நடி த்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தங்களின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியமை திரைப்படத்தின் வெற்றிக்கு பெருதும் துணை செய்துள்ளது.
இந்த படம் ஈழம் தொடர்பாக இதுவரை வெளிவந்த திரைப்படங்களிலிருந்து கதைகளம் தனித்தும் பெற்றுள்ளது. அத்துடன் நம்பகத்தன்மையுடன் இயல்பான பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பம்சமாகும்.
இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்கள் அனுபவித்துவரும் வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் எமது உறவுகள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
படத்தின் இயக்குனர் ஆனந்த ராமணன் தமிழர்களின் பயன்பாட்டிலுள்ள நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்துவகை நிலங்களினை இத்திரைப்படத்தில் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பாலை எப்படி பயனற்று கிடக்கிறதோ, அதேபோல் கண்ணிவெடிகள் புதைக்கபட்டு எந்த உயிரினமும் வாழத்தகுதியற்ற ஒரு நிலமாக ‘ஆறாம் நிலம்’ இருக்கின்றதாக விறுவிறுப்பான முறையில் இயக்குனர் கோடிட்டு காட்டியுள்ளார்.
ஈழத்தில் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், போருக்கு பின் அங்கே வசிக்கும் மக்களின் நிலையை, இயல்புநிலை மீறாவண்ணம் மிக அழகாக படம்பிடித்து பார்ப்பவர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
அதிலும் முன்னாள் போராளியாகவும், கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் ஒரு குழுவின் பொறுப்பாளராகவும் நடித்துள்ள பாஸ்கி தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு போராளியை பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.
கணவனைத் தேடும் பெண்ணாகவும், பிள்ளைக்குத் தாயாகவும், உள்நாட்டு போருக்குப் பின்னரான அத்தனை நெருக்கடிகளையும் சுமந்து கொண்டிருக்கும் அபலைபெண்களின் பிரதிபலிப்பை கண்முன் நிறுத்தியுள்ளார் நாயகி நவயுகா.
கற்பனையாக அப்பாவுடன் விளையாடுவது போல் பாசாங்கு செய்யும் குழந்தை நட்சத்திரமான அன்பரசியின் நடிப்பு பல மனங்களையும் கனக்கச்செய்துள்ளது.
கண்ணிவெடி அகற்றும்போது கை, கால் இழப்புகள் ஏற்பட்டு மரணத்தை தழுவிய தமிழர்களின் சோகத்தை கண் முன் நிறுத்தி சென்றுள்ளது ஆனந்த ரமணனின் “ஆறாம் நிலம்”.
“ஆறாம் நிலம்” திரைப்படத்தின் இணைப்பு,