வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் : அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கத்தின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கான வாகன இறக்குமதி தடையை நீக்கியதன் மூலம் இந்த வருமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி அமைச்ச வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.
அரசாங்கத்தின் நேரடி வருமானம்
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும்.

இது 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.
மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |