இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Journalists In Sri Lanka
By Independent Writer May 22, 2026 07:04 AM GMT
Report

ஊடகத் துறையின் சுயாதீனத்தையும் ஊடகவியலாளர்களின் தொழில்முறை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில், நேரடி கலந்துரையாடலுக்கான சந்திப்பொன்றை வழங்குமாறு கோரி இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

தேசிய ஊடகக் கொள்கை வரைவில் உள்ள தீவிர பிரச்சினைகள் மற்றும் தொழில்முறை ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் குறித்தும் அந்த சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில், வெகுஜன ஊடக பிரதி அமைச்சருடனான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அதுகுறித்த எமது நிலைப்பாடு 2026 மே 13 ஆம் திகதி, எமது சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல், இலங்கையின் ஊடகத் துறைக்கும் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது.

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு

பிரதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் 

அந்த சந்திப்பின் போது பிரதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக எமது சங்கம் தீவிர கவலை கொண்டுள்ளது. அவை தொடர்பாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையும் தெளிவான விளக்கத்தையும் பெற்றுக்கொள்வதே இக்கடிதத்தின் பிரதான நோக்கமாகும்.

அந்த கலந்துரையாடலின் போது பிரதி அமைச்சர் பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார்:

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை | Sl Working Journalists Association Requests Anura

1. தேசிய ஊடகக் கொள்கை வரைவு

தேசிய ஊடகக் கொள்கை வரைவிற்கு விரைவில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் என்றும், தேசிய அளவிலான ஊடகக் கொள்கை ஒன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் அவசியமான முன்னுரிமையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2. கொள்கைக்கு எதிரான நிலைப்பாடுகள்

தேசிய ஊடகக் கொள்கை வரைவுக்கு எதிராக கருத்து வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்றும், இதற்கு முன்னர் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சருடன் கலந்துரையாடிய எந்த தரப்பும் அதற்கு எதிர்ப்பு வெளியிடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.

3. ஊடகத் துறையின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு

தற்போதைய தொழிலாளர் சட்டங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால் பல ஊடக நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன என்றும், வேலைவாய்ப்பு பாதுகாப்பு தொடர்பாக கட்டமைப்பு ரீதியான சிக்கல்கள் நிலவுகின்றன என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

4. இலங்கை பத்திரிகை பேரவை மற்றும் சுயாதீன ஊடக ஆணைக்குழு

இலங்கை பத்திரிகை பேரவையை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்குப் பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழு அல்லது இணை-ஒழுங்குமுறை அமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் பல தரப்பினரின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சகம் குழுவொன்றை நியமிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

5. சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்டமூலங்கள்

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act - RTI) திருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act - OSA) தொடர்பான திருத்தங்கள் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அது சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் கீழ் இல்லாவிட்டாலும், அவற்றை விரைவுபடுத்துமாறு தொடர்புடைய அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஊடகத் தொழில்முறை நிபுணர்களுக்கான பட்டய நிறுவனம் தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

6. PTA / PSTA தொடர்பான எதிர்ப்புகள்

PTA மற்றும் PSTA போன்ற சட்டங்களுக்கு எதிராக ஊடக அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் வெளியிட்டுள்ள எதிர்ப்புகளும் அவற்றின் காரணங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வாகன இலக்கத்தகடுகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வாகன இலக்கத்தகடுகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

 தேசிய ஊடகக் கொள்கை வரைவு 

இந்த கலந்துரையாடலின் போதும், தேசிய ஊடகக் கொள்கை வரைவில் உள்ள தீவிர பிரச்சினைகள் மற்றும் தொழில்முறை ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் குறித்து எமது சங்கம் பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் ஊடக அமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்திருப்பதை மீண்டும் வலியுறுத்தினோம்.

அவ்வாறிருக்க, தேசிய ஊடகக் கொள்கை வரைவைச் சுற்றியுள்ள எமது சங்கத்தின் எதிர்ப்புகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து அமைச்சகம் அறியாதது போல் செயற்படுவது எமக்கு கடும் கவலையளிக்கிறது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை | Sl Working Journalists Association Requests Anura

மேலும், பிரதி அமைச்சர் வெளியிட்ட மேற்கண்ட கருத்துக்கள் தற்போதைய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மற்றும் இறுதியான நிலைப்பாடுகளா என்பதை தெளிவுபடுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், தேசிய ஊடகக் கொள்கை மற்றும் ஊடகத் துறையில் நிலவும் சிக்கல்கள் தொடர்பாக, எமது சங்கம் முன்னதாக ஊடக அமைச்சருக்கும், பிரதி அமைச்சருக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும் அனுப்பியிருந்த உத்தியோகபூர்வ கடிதங்களுக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்காதது எமக்கு ஆழ்ந்த அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதி அமைச்சர் விளக்கிய விடயங்களின் அடிப்படையில், முன்மொழியப்படும் சில சட்டங்களும் கொள்கைகளும் மக்களின் கருத்துரிமை மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அரசின் முறைகேடுகள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை பாதுகாக்கும் அடக்குமுறை கருவிகளாக மாறக்கூடும் என நாங்கள் கருதுகிறோம்.

முன்னாள் அரசுகள் ஊடகவியலாளர்களையும் அரசியல் எதிர்ப்பாளர்களையும் கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களே இன்று அதே சட்டங்களை புதிய வடிவிலும் புதிய பெயர்களிலும் மீண்டும் கொண்டு வர முயற்சிப்பது வரலாற்றின் பரிதாபகரமான முரண்பாடாகும்.

இன்று எங்களை அடக்க பயன்படுத்தப்படும் சட்டங்களும் கொள்கைகளும், நாளை அதிகாரத்தை இழந்த பின் உங்கள்மீதும் பயன்படுத்தப்படலாம் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.

எனவே, ஊடக நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், ஊடக உரிமையாளர்கள், ஊடக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் விரிவான ஒப்புதலுடனேயே இத்தகைய சட்டங்களும் கொள்கைகளும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஊடகத் துறையின் சுயாதீனத்தையும் ஊடகவியலாளர்களின் தொழில்முறை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில், மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக எமது சங்கத்துடன் நேரடி கலந்துரையாடலுக்கான சந்திப்பொன்றை வழங்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். தங்களின் விரைவான பதிலை எதிர்பார்க்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசமான காலநிலை : கட்டுநாயக்கவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

மோசமான காலநிலை : கட்டுநாயக்கவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026