இந்த ஆண்டில் 250,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE), 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதை இலக்காக நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வேலைவாய்ப்புகள், இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலம் எளிதாக்கப்படும் என்று அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் தொடரும் மோதல் காரணமாக வெளிநாட்டு வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களில் உள்ள அதிக சம்பளம் தரும் வேலைகளுக்கு வழிநடத்த பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இஸ்ரேலுக்கு அனுப்பும் திட்டம்
அதன்படி, இந்த ஆண்டின் இதுவரையில் 143,087 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டுள்ளதாகவும் அவர்களில், 92,590 பேர் ஆண் தொழிலாளர்கள் எனவும் 50,497 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களிடையே மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான இஸ்ரேலுக்கு 14,000 இலங்கைத் தொழிலாளர்களை அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.
இதுவரை, 7,873 தொழிலாளர்கள் இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டுள்ள நிலையில் மேலும், 8,000 தொழிலாளர்களை தென் கொரியாவிற்கு அனுப்ப பணியகம் எதிர்பார்ப்பதுடன் அங்கு ஏற்கனவே 4,794 தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
4.6 பில்லியன் டொலர்கள்
அந்தப் பணியகத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை 73,623 இலங்கையர்கள் திறன்சார்ந்த வேலைவாய்ப்புக்காகப் புலம்பெயர்ந்துள்ளதுடன் 69,494 தொழிலாளர்கள் திறன்சாரா வேலைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அதாவது ஜனவரி முதல் ஜூன் வரை, 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 8 மணி நேரம் முன்