விரைவில் புதிய மாற்றம் - காலக்கெடு விதித்தார் கோட்டாபய ராஜபக்ச
கடந்த தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, எதிர்வரும் மூன்று வருடங்களில் நிறைவேற்றுவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம தொடக்கம் குருநாகல் வரையான பகுதியை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அரச தலைவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''நாட்டில் உள்ள விவசாயிகளை நான் எப்போதும் மறவேன். அவர்களுக்காக, பயிர்ச்செய்கை முறையில் விரைவில் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளோம்.
கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீளச் சரிசெய்ய முடியும்.
நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் எம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தவறான விமர்சனங்களை கேட்டு யாரும் ஏமாறக்கூடாது.
பொய்யான பிரசாரங்களுக்கு ஏமாறாமல் வரவிருக்கின்ற மூன்று வருடங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கைகோர்க்குமாறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளிடம் அரச தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
You May Like This