மூடிய அறைக்குள் கோட்டாபய - ரணில் திடீர் சந்திப்பு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (7) இடம்பெற்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் அரச தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் மாத்திரமே கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்திற்கான விஜயம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் அரச தலைவர் விரிவாக கேட்டறிந்தார்.
மேலும், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பிராந்தியத்தில் ஐந்து முக்கிய நாடுகளால் அமைக்கப்படவுள்ள உத்தேச குழுக்கள் குறித்தும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோட்டாபய ராஜபக்ச நீண்ட நேரம் கேட்டறிந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் சில நிமிட கலந்துரையாடலின் பின்னர் அரச தலைவர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினார்.
