இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
corona
sri lanka
people
By Shalini
கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவில் நிறைவு செய்ய வேண்டியுள்ளமையினால், அனைவரையும் தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கொரோனா பரவலை தடுப்பதற்கு காணப்படும் ஒரே வழிமுறை தடுப்பூசி பெற்றுக்கொள்வது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஏனைய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
சில பகுதிகளில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை எனவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.