மாத்தறையில் பாடசாலை ஒன்றுக்கு விடுமுறை : வெளியான அறிவிப்பு
Matara
Sri Lanka
Sri Lankan Schools
By Raghav
மாத்தறை (Matara) மாவட்டத்தின் தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தின் சில வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக இன்றையதினம் (24.10.2024) இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
இதன்படி நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலையை கருத்திற் கொண்டு 10 வகுப்புகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தின் தரம் 06 மற்றும் தரம் 08 ஆகிய வகுப்புகள் இயங்கும் இரண்டு மாடிக் கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள மண்மேடு சற்று சரிந்துள்ளது.
இந்த நிலையில் இது பாரிய மண்சரிவாக ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
உயிர் காக்கும் மருத்துவமனையே படுகொலைக்களமான நினைவுகள்… 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்