பாடசாலை விடுமுறை: விசேட தொடருந்து சேவை ஆரம்பம்
பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை (Sri Pada) ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தொடருந்து திணைக்களம் (Department of Railways) விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதன்படி கொழும்பு (Colombo) – கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (28.03.2025) முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள தொடருந்து சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விசேட தொடருந்து சேவை
இதன்படி, கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விசேட தொடருந்து சேவையானது இரவு 7.30க்கு புறப்படவுள்ளது.
அந்த தொடருந்து கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையம் நோக்கி அந்த நாட்களில் பிற்பகல் 5.20க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இதுதவிர, கொழும்பு – கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி எதிர்வரும் 29,30 மற்றும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விசேட தொடருந்து சேவையானது காலை 5.15க்கு புறப்படவுள்ளது.
அந்த தொடருந்து திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து அந்த நாட்களில் பிற்பகல் 1 மணிக்குப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
