கிளிநொச்சியில் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட 16 சிறுவர்கள் : வெடித்த சர்ச்சை

Sri Lanka Police Kilinochchi Law and Order
By Shalini Balachandran Apr 12, 2025 07:25 AM GMT
Report

கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் நபரொருவர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில், அவரிடம் விளையாட்டு பயிற்சிக்காக சென்ற சிறுவர்களில் 16 பேரையே அவர் தகாத முறைக்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிக்கித் தவிக்கும் பிள்ளையான் : 90 நாள் தடுப்புக்காவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சிக்கித் தவிக்கும் பிள்ளையான் : 90 நாள் தடுப்புக்காவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பாடசாலை நிர்வாகம் 

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பத்து தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவர்களில் சிலரின் நடத்தைகளில் மாற்றம் மற்றும் கல்வியில் திடீர் பின்னடைவு என்பவற்றின் அடிப்படையில் கவனம் செலுத்திய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட 16 சிறுவர்கள் : வெடித்த சர்ச்சை | Sports Coach Abused 16 Children Kilinochi

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த பயிற்றுவிப்பாளரால் 16 சிறுவர்கள் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு காவல்துறையினருக்கு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வரலாற்றில் மோசமான சாதனை படைத்த சென்னை அணி - ஏமாற்றம் தந்த தோனி

வரலாற்றில் மோசமான சாதனை படைத்த சென்னை அணி - ஏமாற்றம் தந்த தோனி

 சட்ட நடவடிக்கை

இதன்பின், இன்றைய தினம் (11) கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட 16 சிறுவர்கள் : வெடித்த சர்ச்சை | Sports Coach Abused 16 Children Kilinochi

எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு சென்ற காவல்துறையினர் சிறுவர்களை மாலை நான்கு மணிவரை அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளதோடு அவர்களை காவல்துறை வாகனத்தில் காவல் நிலையம் ஏற்றிச்செல்ல முற்பட்டுள்ளனர் என பெற்றோர் குறிப்பிட்டுள்ளதோடு காவல்துறையினரோடு முரண்பாடும் ஏற்பட்டுள்ளது.

யாழில் பரிதாபமாக பலியான முதியவர் : 27 வயது இளைஞர் கைது

யாழில் பரிதாபமாக பலியான முதியவர் : 27 வயது இளைஞர் கைது

பாதிக்கப்பட்ட சிறுவர்கள்

இந்நிலையில், தங்கள் பிள்ளைகள் குற்றவாளிகள் அல்ல அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எனவே அவர்களின் உளவியலை புரிந்து கொண்டு காவல்துறையினர் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதோடு விசாரணைகளுக்காக பிள்ளைகளை தாம் காவல்துறையினர் அழைத்து வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து காவல்துறையினர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் வகையில் பெற்றோரை இந்த பிரச்சினையில் தாமாக விலகிக்கொள்ளும் விதமாக காவல்துறையினர் நடவடிக்கைகள் அமைந்துள்ளது என்றும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட 16 சிறுவர்கள் : வெடித்த சர்ச்சை | Sports Coach Abused 16 Children Kilinochi

குறித்த விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

கிளிநொச்சி காவல் நிலைய பொறுப்பதிகாரியுடன் இன்று (12) தொடர்புகொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி காவல்நிலைய நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறுவர்களை தகாதமுறைக்கு உட்படுத்தியமை மிகப்பெரிய சமூக அனர்த்தம் ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றங்களை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் : சிறீதரன் சூளுரை

உள்ளூராட்சி மன்றங்களை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் : சிறீதரன் சூளுரை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Chennai, India, Toronto, Canada

24 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், தாவடி

10 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, சென்னை, India

03 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, கொழும்பு, சண்டிலிப்பாய், சாவகச்சேரி கல்வயல்

25 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில்

24 Jul, 1985
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024