ஊழல் அரசாங்கத்திடம் பணம் அனுப்பமாட்டோம்- வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் திட்டவட்டம்!

sri lanka economic central bank government dollar
By Kalaimathy Apr 15, 2022 06:56 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இலங்கை 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளமை தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளன.

இலங்கையின் கடன் தொகையானது 51 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியின் புதிய நியமிக்கப்பட்ட நந்தலால் வீரசிங்க, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் டொலர்களை அனுப்பி வைக்குமாறு கோரி இருந்தார்.

எனினும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இதுவரை சாதகமான பதிலை வழங்கவில்லை என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள துரதிஷ்டவசமான நிலைமையை கவனத்தில் கொண்டு, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவ்வாறு வழங்கப்படும் நிதியானது உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும் என அவர் வெளிநாட்டு ஊடகங்களிடம் உறுதியளித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெயரை வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர், நாட்டுக்கு பணத்தை வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் எனினும் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசாங்கத்திடம் பணத்தை வழங்க தயாரில்லை எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை தாம் வழங்கும் நிதி வினைதிறனாக மற்றும் சரியாக பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கை தமக்கில்லை என கனடாவில் வசித்து வரும் கணனி பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், தற்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் உள்ள மக்கள் வழங்கிய பணத்தை கொள்ளையிட்டதாக பிரித்தானியாவில் வசிக்கும் தாதி அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனடிப்படையில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு நிதி வழங்க மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வெளிநாட்டு கடனைகளை செலுத்த முடியாமை, அத்தியவசிய உணவு பொருள், மருந்து தட்டுப்பாடு மேலும் அதிகரித்து நிலைமை மிக மோசமாக மாறலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் எச்சரித்துள்ளன.

மேலும் நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இலங்கை புரட்சிகரமான கட்டத்தை நோக்கி செல்வதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டு, பலர் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும் எனவும் அது 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட வீடு நெருக்கடிக்கு இணையான நிலைமையாக மாற வாய்ப்புள்ளதாகவும்  பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025