இலங்கையை அதிரவைத்த மக்கள் புரட்சி! ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அதிகார மாற்றம் அமைதியான முறையில் உறுதிசெய்யப்பட வேண்டும் என அந்நாட்டில் உள்ள ஐ.நா தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை நிலைமை தொடர்பில் ஐ.நா தூதரகம் மேலும் குறிப்பிடுகையில்,
கடும் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் சிக்கி தவித்து வருகிறது.
மக்கள் போராட்டம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளதாக, தெரிவித்துள்ளது.