உரிமையாளர்களுக்கிடையில் தகராறு - சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் பதற்றம்!
உரிமையாளர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுயள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு கொழும்பில் உள்ள செலிங்கோ கட்டடத்தில் அமைந்துள்ள நிலையில் குறித்த கட்டடம் பல உரிமையாளர்களைக் கொண்டது எனவும், இந்நிலையில், இரு உரிமையாளர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாகவே இந்த பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சேவை பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்த பதற்றமான சூழல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.