காலை முதல் கொதிநிலையில் தென்னிலங்கை - தாக்குதலுக்கு தயார் நிலையில் படையினர்!
கொழும்பு-காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய தரப்பினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தற்போது கொழும்பு - லோட்டஸ் வீதியில் வீதித்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.
காலை முதல் தென்னிலங்கையில் போராட்டம்
காலி முகத்திடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று காலை முதல் தென்னிலங்கையில், ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்திரளானவர்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் லோட்டஸ் பகுதியில் பெருமளவு படையினர் பொல்லுகள், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்வற்றை நடத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.