இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா - ஒரே நாளில் பதிவான தொற்றாளர்கள்!
இலங்கையில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாளாந்தம் 30 தொடக்கம் 40 நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் தொற்று நோய் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 62 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தடுப்பூசி போடாதவர்களை விட தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் வைரஸிலிருந்து நன்கு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை தரவு நிரூபித்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரிசோதனைகள் முன்னர் போன்று பல பகுதிகளில் தற்போது இடம்பெறவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இலங்கையில் உண்மையான கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட எண்ணிக்கையை விட கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்று அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.