ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவு
covid
corona
sri lanka
patient
By Vanan
இலங்கையில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினம் இதுவரையில் 3,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 151,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,222 பேர் இன்று (19) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இவர்களில் 1,015 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்