மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலையிலும் பரவியது கொரோனா
covid
srilanka
patient
19
By Vasanth
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் மேலும் நான்கு தொழிலாளர்களுக்கு இன்று (12) கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று ஹபரதுவா சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் பிரமோதய சிறிவர்தன தெரிவித்தார்.
அதன்படி, இந்த ஆடை தொழிற்சாலையில் கொரோனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
இந்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து அங்கு பணிபுரியும் 40 பேர் நேற்று (11) பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
Tags : #Sri Lanka #Covid-19 #Patient
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி