மோசமான நிலைக்குள் இலங்கை - சுகாதார தரப்பு வெளியிட்ட தகவல்
இலங்கையின் மொத்த சனத்தொகையில் இரண்டில் ஒரு பங்கினர் எவ்வித தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லையென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் ,சுமார் இரண்டு மில்லியன் பேர் எவ்வித தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பரவலடையும் வைரஸ் தொற்றுத் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
''நோய் அறிகுறிகள் எதுவுமின்றி ஒமைக்ரோன் தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படாமையினால் அதிகமானவர்கள் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனைகளையும் மேற்கொள்வதில்லை.
இதனால், உடல் பலவீனமானவர்களுக்கு தொற்று ஏற்படும் பட்சத்தில் மரணங்கள் சம்பவிக்கும் வீதம் அதிகரிக்குமென'' தெரிவித்துள்ளார்.