மீண்டும் விலையேற்றத்தை அறிவித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
sri lanka
price
fuel
pedrol
By Kalaimathy
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 77 ரூபாவாலும் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 76 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் டீசலின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்புக்கு அமைய ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 254 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 283 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் டீசல் 176 ரூபாய் அதிகரித்துள்ளதுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 254 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மண்எண்ணெயின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி