லிட்ரோ நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்- அறிவிக்கப்பட்டது திகதி!
எதிர்வரும் திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயுவை தாங்கி கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு தாமதம்
நேற்றைய தினம் இலங்கைக்கு வரவிருந்த 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
குறித்த கப்பல் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, குறித்த எரிவாயு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
காத்திருக்க வேண்டாம்
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.
எனவே, எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது.