ஜோன்ஸ்டனின் மனு தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை!
Johnston Fernando
Sri Lanka
Government Of Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Kalaimathy
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதேவேளை, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் நோக்கில் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுத்தாக்கல்
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமா அதிபர் கோரிக்கை
இந்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி அப்ரூ இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அத்துடன் கோட்டை நீதவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மனுவைத் தொடர முடியாது எனவும் அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்